ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 26-ஆம் தேதி 11, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இதுவரை 9 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 26-ஆம் தேதி 11, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 11-ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்கள் 61% பேரும், 12-ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்கள் 72 % பேரும் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த நிலையில், தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இதுவரை 9 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டள்ளனர். மேலும் இரு மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் தருண் (17 வயது) என்ற மாணவர் 11-ஆம் வகுப்பில் பெரும்பாலான பாடங்களில் தோல்வியடைந்ததால் மனமுடைந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அதே போல் விசாகப்பட்டினம் மாவட்டம் திரிநாதபுரத்தில் அகிலஸ்ரீ (16 வயது) என்ற மாணவி 11-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறததால், தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
மேலும் விசாகப்பட்டினத்தின் கஞ்சரபாலம் பகுதியில் வசிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவர் (18 வயது) தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர்கள் இருவர் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்டனர். ஒரு மாணவி ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அதே மாவட்டத்தில் ஒரு மாணவர், பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு 17 வயது மாணவர் அனகாபள்ளியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.